பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம்: சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சட்ட விரோத பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு செய்துள்ளது.

மேலும் இந்த ரோந்து வாகனம் சென்னை காவல் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றும் பிரத்யேக தொலைபேசி எண்ணுடன் கூடிய 3 ரோந்து வாகனங்கள், சென்னையை மூன்று மண்டலங்கள் மற்றும் வட்டாரங்களாக பிரித்து ரோந்து வாகனம் சுற்றும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை ஓகே என்றாலும் இது நீடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது

Leave a Reply