பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்த அமெரிக்கா: நிராகரித்த வடகொரியா
கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் வடகொரியா, அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளை விரைவில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பினும் தற்போது வடகொரியாவுடன் அணு ஆயுதங்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளது
ஆனால் அணுஆயுத சோதனைகள் குறித்த எந்தவித முன் நிபந்தனையும் இல்லாமல் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என வடகொரியா இந்த யோசனையை நிராகரித்துள்ளது.
இதுகுறித்து வடகொரியா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “வாஷிங்டன் இந்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் இதில் அணுஆயுதங்களை கைவிடுவதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ஐ.நா.வின் தீர்மானங்களை எங்கள் மீது திணிக்கும் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது” என்று கூறியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.