shadow

பெண்கள் ‘மேமோகிராம்!’ பரிசோதனையை எப்போது செய்ய வேண்டும்?

உடலுக்கு எக்ஸ் – ரே போன்று, மார்பக பரிசோதனை செய்ய பயன்படும் பிரத்யேக கருவி, ‘மேமோகிராம்!’ மார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால், தெரிந்து கொள்ள செய்யப்படுவது, ‘டயாக்னாஸ்டிக் மேமோகிராம்!’ ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகத்தில், டாக்டரிடம் வருபவர்களுக்கு, செய்யப்படுவது, ‘ஸ்கிரீனிங் மேமோகிராம்!’

எந்தப் பிரச்சனையும் இல்லாத போது, 35 வயதிற்கு முன், ‘மேமோகிராம்’ பரிசோதனையை செய்யக் கூடாது. காரணம், இந்தப் பரிசோதனையில், கதிர்வீச்சை உடலினுள் செலுத்தியே பரிசோதிக்கிறோம்; கதிர் வீச்சால் பாதிப்புகள் ஏற்படலாம்.

நாற்பது வயதிற்கு மேல், மரபியல் ரீதியில், அதிக, ‘ரிஸ்க்’ உள்ள பெண்கள், ஆண்டிற்கு ஒருமுறை எக்ஸ் – ரே செய்து கொள்ளலாம்; மற்றவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யலாம்.

இந்தப் பரிசோதனையை, நன்கு தேர்ச்சி பெற்ற, பெண் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமே செய்ய முடியும்.

பயிற்சி பெற்றவர்கள் உள்ள மையத்தில், இதை செய்து கொள்ளும் போது தான், பிரச்னை உள்ளதா, இல்லையா என்பதை சரியாக சொல்ல முடியும்.
அப்படி இல்லாத பட்சத்தில், இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருக்கிறது என்றும் தவறாக சொல்லி விடும் அபாயம் உள்ளது.

Leave a Reply