பிறப்புறுப்பில் கோளாறு: பெண் குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சித்த தந்தை!

ஹைதராபாத்தில் பெண் குழந்தை ஒன்று பிறக்கும்போதே பெண்ணுறுப்பில் கோளாறுகள் இருந்ததால் அந்த பச்சிளம் குழந்தையை பெற்ற தந்தையே உயிருடன் புதைக்க முயற்சி செய்த திடுக்கிடும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு மானசா என்ற பெண்ணுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் பிறப்பு உறுப்பில் கோளாறு இருந்ததை அடுத்து குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்

ஆனால் அதற்கு அதிக செலவாகும் என்றும் அப்படியே செலவு செய்தாலும் அந்த குழந்தை நல்லபடியாக தேறி வருமா என்றும் சந்தேகம் அடைந்த அந்த குழந்தையின் தந்தை, தனது தந்தையுடன் சேர்ந்து அந்தக் குழந்தையை உயிரோடு புதைத்து விடலாம் என்று முடிவு செய்து உள்ளனர்

இதனை அடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்குச் சென்று குழந்தைக்காக குழி கொண்டிருக்கும்போது தற்செயலாக அதனை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்

போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் தந்தை மற்றும் தாத்தா ஆகிய இருவரையும் விசாரணை செய்தபோது குழந்தை குறையுடன் பிறந்ததால் உயிருடன் புதைக்க முயற்சி செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்

இதனை அடுத்து குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவெனில் குழந்தையை பெற்ற தந்தையே கொலை செய்த விவரம் தெரியாமல் மயக்கத்தில் அந்த குழந்தையின் தாயார் உள்ளார் என்பதுதான்

Leave a Reply