பிரான்ஸ் ஈபிள் டவர் திடீர் மூடல்: ஏன் தெரியுமா?
உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸ் ஈபிள் டவர் இன்று மூடவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிரான்சில் நாட்டில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடந்து வரும் நிலையில் இன்று நடைபெறும் போராட்டம் காரணமாக ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் போராட்டத்தால் பிரான்சில் மிகப்பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக பிரான்ஸ் முழுவதும் 89 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,
கடந்த வாரம் இதே போல நடந்த ஒரு போராட்டத்தின்போது பிரான்சில் உலகப்புகழ் பெற்ற ஆர் டி ட்ரோம் சேதப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.