பாஜக கூட்டணி கட்சிபோல் செயல்படுகிறது தேர்தல் ஆணையம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தேர்தல் ஆணையம் மீது குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சிபோல் தேர்தல் ஆணையம் செயல்படுவது பேரதிர்ச்சியளிப்பதாகவும், ஜனநாயகத்தின் முகத்தில் தேர்தல் ஆணையமே கரி பூசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில் தீர்ப்புக்கு பிறகும் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய சின்னங்கள் மறுக்கப்படுகின்றன. ஆனால், பாஜக – அதிமுக கூட்டணியின் கட்சிகளுக்கு அங்கீகாரத்தை இழந்திருந்தாலும் அவர்கள் கேட்பதற்கு முன்னரே பழைய சின்னமே ஒதுக்கப்படுவது ஜனநாயகப் படுகொலை என்றும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply