பாஜகவில் இணைந்த 3 எம்.எல்.ஏக்கள்: மம்தா ஆட்சி கவிழ்கிறதா?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் இன்று திடீரென பாஜகவில் இணைந்துள்ளதால் அம்மாநில அரசுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தில் பாஜக 18 தொகுதிகளில் வென்று சாதனை படைத்தது. அதனையடுத்து மம்தா அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 2 பேர், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ என மொத்தம் மூன்று எம்.எல்.ஏக்களும், 50 கவுன்சிலர்களும் இன்று பாஜகவில் இணைந்தனர்

 

Leave a Reply