பதவியேற்ற சில நிமிடங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட மேயர்! பெரும் பரபரப்பு
மெக்சிகோ நாட்டில் உள்ள ஆக்சகா மாநிலத்தின் டிலாக்சியாகோ நகர மேயராக அலெஜாண்டரோ அபார்சியோ என்பவர் கடந்த ஒன்றாம் தேதி பதவியேற்ற நிலையில் பதவியேற்ற சில நிமிடங்களில் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேயர் அலெஜாண்டாரோ பதவியேற்ற சில நிமிடங்களில் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அங்குள்ள அரங்கத்திற்கு புறப்பட்டார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர், மேயரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மேயர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் போலீசார் ஒருவரை கிஅது செய்து விசாரணை செய்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.