shadow

மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி இறந்து விட்டதாக வதந்தி கிளம்பியதை அடுத்து அந்த மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவரை நோயாளியின் உறவினர்கள் இரும்பு கம்பி உள்பட பல்வேறு பொருள்களில் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா என்ற பகுதியில் சமீபத்தில் உடல் நலக்கோளாறு காரணமாக நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்

அவர் திடீரென இறந்து விட்டதாக மருத்துவமனையில் வதந்தி கிளம்பியது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் மின்விசிறி, இரும்பு கம்பிகள், ஹெல்மெட் ஆகியவற்றைக் கொண்டு அங்கிருந்த நர்ஸ் ஒருவரை கடுமையாக தாக்கினார்கள். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

 

Leave a Reply