நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: மேலும் 3 மாணவர்கள் தந்தைகளுடன் கைது!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித் சூர்யாவும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் காஞ்சிபுரம் தனியார் கல்லூரிகளில் படித்துவந்த 3 மாணவர்களும் அவர்களது தந்தைகளும் கைது செய்யப்பட்டதாக தகவல்

உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிசிஐடி இந்த ஆறு பேர்களையும் கைது செய்துள்ளதாக தெரிகிறது

கைது செய்யப்பட்ட 6 பேரையும் விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் தேனி அழைத்து சென்றுள்ளதாகவும் இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply