நிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு

கோதாவரி – கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட அறிவிப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த திட்டம் தற்போதைய நிலையில் மிக அவசியமான ஒன்று என்றும், தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதவியேற்றதும் தன்னுடைய முதல் பணி தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கோதாவரி – கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதுதான் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply