ஒரு தாயின் பெருமிதம்

என் மகன் நாட்டிற்காக உயிர் இழந்தது மகிழ்ச்சியும் சந்தோஷமும் இருக்கிறது என உயிரிழந்த ராணுவ வீரரின் தாய் கூறியுள்ளார்.

நேற்றிரவு இந்திய சீன எல்லையில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார்

இந்த நிலையில் உயிரிழந்த இன்னொருவர் பெயர் சந்தோஷ் பாபு என தெரியவந்துள்ளது. சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ கமாண்டர் சந்தோஷ் பாபு அவர்களின் தாய் தனது மகன் வீரமரணமடைந்த குறித்து உருக்கமாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்

ஒரு தாயாக என் மகனின் இறப்பு என்னை சோகத்தில் ஆழ்த்தியது, ஆனால் நாட்டுக்காக சண்டையிட்டு உயிர் தியாகம் செய்வதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்

Leave a Reply