shadow

நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்து நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும் ஓசூரில் தமிழக மற்றும் கர்நாடக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அதேபோல் கன்னியாகுமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தம் காரணமாஅக புதுச்சேரி முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன

 

Leave a Reply