shadow

நாக்பூர் டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 14 பேர் கொண்ட வீரர்கள் அடங்கிய பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வீரர்களின் பட்டியல்: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், எம்.விஜய், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ரவிந்திரா ஜடேஜா, குல்தீப் யாதவ், மொகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக பொறுப்பு வகித்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply