நயன்தாராவிடம் இருந்து திடீரென பிரிந்த விக்னேஷ் சிவன்! அதிர்ச்சித் தகவல்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் என்பதும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்பதும் இதனையடுத்து இருவரும் கடந்த சில வாரங்களாக கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் காதலர்கள் என்ற இணைப்பில் இருவரும் ஒற்றுமையாக இருந்த போதிலும் தயாரிப்பாளர்-நடிகை என்ற உறவில் இருந்து இருவரும் பிரிய இருப்பதாக தெரிகிறது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகவிருந்த நெற்றிக்கண் என்ற திரைப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் எதுவும் தொடங்காமல் உள்ளது
மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ்சிவன் நடிக்க இருந்த திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டதன் காரணமாக பொருளாதார சிக்கல் காரணமாக நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கவில்லை என்றும் இந்த படமும் கிட்டத்தட்ட டிராப் என்றும் கூறப்படுகிறது
மேலும் நெற்றிக்கண் படத்திற்காக ஒதுக்கிய தேதிகளை நயன்தாரா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்திற்கு மொத்தமாக கொடுத்துவிட்டதால் நெற்றிக்கண் திரைப்படம் மீண்டும் தொடங்கும் என்றும் கேள்விக்குறியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.