நம்பிக்கை அளித்த ஷாக் டெஸ்ட் முடிவுகள்: மீண்டும் செயல்படுமா விக்ரம் லேண்டர்?

சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவில் தரையிறங்கும் கடைசி நேரத்தில் விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது விக்ரம் லேண்டர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இப்போதைக்கு அதனை மீண்டும் செயல்பட வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். விக்ரம் லேண்டர் உடன் எவ்வளவு வேகமாக இணைப்பை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு வேகமாக செய்ய வேண்டும் என்றும், அதன் ஷாக் டெஸ்ட் முடிவுகள் நம்பிக்கை அளித்துள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திராயன் 2வின் ஆர்பிட்டர் நிச்சயம் விக்ரம் லேண்டரை செயல்பட வைத்துவிடும் என்ற நம்பிக்கை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அதிகரித்துள்ளதாகவும், எந்த நேரமும் நல்ல செய்தி வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply