நந்தினியை அடுத்து நந்தினியின் தங்கையும் கைது

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி தந்தையுடன் கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் நந்தினிக்கு கடந்த 5ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

இந்த நிலையில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினியின் கைதை அடுத்து அவருடைய தங்கை நிரஞ்சனாவும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மதுரை சட்டக்கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக சட்டக்கல்லூரி மாணவி நந்தினியின் தங்கை நிரஞ்சனா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply