நடிகர் சங்கத் தேர்தல் வழக்கின் தீர்ப்பு: விஷால் தரப்பு அதிர்ச்சி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த இந்தத் தேர்தல் குறித்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது இந்த தீர்ப்பால் விஷாலின் பாண்டவர் அணி அதிர்ச்சி அடைந்துள்ளது
இந்த தீர்ப்பின் படி கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்றும் மீண்டும் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். புதிய வாக்காளர் பட்டியலை தயார் செய்து அதன்பின்னர் மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்த தேர்தலுக்கு கண்காணிப்பாளராக கோகுல் தாஸ் என்பவரை நியமனம் செய்திருப்பதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்

மேலும் புதிய தேர்தல் நடைபெற்று முடிந்து நிர்வாகிகள் பொறுப்பேற்கும் வரை இப்போது உள்ள தனி அதிகாரி நடிகர் சங்க பணிகளைத் தொடங்குவார்கள் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்று மீண்டும் நிர்வாகத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பால் அந்த அணியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply