தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட இரு தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள பயிற்றுநர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீஷியன், மெக்கானிக்(“ரெஃப்ரிஜிரேஷன்’, “ஏர் கன்டிஷனிங்’) ஆகிய இரு பிரிவுகளில் தலா இரு காலிப் பணியிடங்கள் உள்ளன.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அடிப்படைக் கல்வியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப் பிரிவினர் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 37 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் 40 -வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் “துணை இயக்குநர் -முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வடசென்னை – 600021′ என்ற முகவரிக்கு வரும் 27 -ஆம் தேதிக்குள் (ஜன.27)விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து 044-2520 9268 என்ற எண்ணில் கூடுதல் தகவல்களை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.