தொடர் மழை எதிரொலி: பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையில் ஆகியவற்றால் இன்று தமிழகம் முழுவதும் மிதமான, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது
இந்த நிலையில் இன்று காலை சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் அறிவித்துள்ளார்,
ஏற்கனவே சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.