தேனி கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்தவர் மரணம்: பெரும் பரபரப்பு
கடந்த ஆண்டு நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீண்டு வர முடியாத நிலையில் இன்று தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஒருவர் தீக்குளித்து மரணம் அடைந்துள்ளார்.,
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முனியாண்டி என்பவர் நேற்று திடீரென தீக்குளித்தார். முனியாண்டியிடம் ஒரு நபர் வேலைவாங்கி தருவதாக பண மோசடி செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளித்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தேனி போலீசார் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வாலிபரை தேடி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.