தேனாம்பேட்டை, கோபாலபுரம் பகுதிகளில் துணை ராணுவத்தினர் குவிப்பு.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் காவேரி மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை வெளியிட்டதை அடுத்து திமுக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமாகி தனது சிங்கக்குரலில் கர்ஜிக்க வேண்டும் என்று தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்களின் கூட்டம் நேரம் ஆக ஆக அதிகரித்து கொண்டே வருகிறது.
எனவே தேனாம்பேட்டை , கோபாலபுரம் பகுதிகளில் வாகனங்களுடன் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.