shadow

தெய்வங்களாக இருந்தாலும்கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமையில்லை உயர்நீதிமன்ற நீதிபதி

தமிழக கோவில்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற இந்துசமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் குறித்த புள்ளி விவரம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தெய்வங்களாக இருந்தாலும்கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமையில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக சாலைகளை ஆக்கிரமித்து எவ்வளவு கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும், எவ்வளவு கோயில்கள் அகற்றப்பட்டுள்ளது என்பது குறித்தும் முழு விவர அறிக்கையை வரும் 21 ஆம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Leave a Reply