தீபாவளி மற்றும் பொங்கல் தினங்களை குறிவைத்த நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே ஒப்புக்கொள்கிறார். அவ்வாறு ஒப்புக்கொண்ட படங்களில் அறம் மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய படங்களும் உண்டு
இந்த நிலையில் இந்த இரு படங்களையும் தீபாவளி மற்றும் பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
வரும் தீபாவளிக்கு விஜய்யின் ‘மெர்சல்’ வெளியாகவுள்ளது என்று தெரிந்தும் துணிச்சலாக நயன்தாரா இந்த படத்தை வெளியிட முடிவு செய்தது அவருக்கு இந்த படத்தின் மீதுள்ள நம்பிக்கையை காட்டுவதாக கூறப்படுகிறது.
அதேபோல் வரும் 2018ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதே தினத்தில் நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.