திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு விபரம்

கடந்த 2016ஆம் ஆண்டு கோவில் என்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

இந்த மனு மீதான விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது

இந்த தீர்ப்பில் திருமாவளவன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

Leave a Reply