திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு: நாளை தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் நாளை மாலை 4.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளதால் இந்த தீர்ப்பை அடுத்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் வழக்குகள் இருப்பதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் இந்த மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் இந்த வழக்கை தொடுத்த சரவணன் வழக்கை திரும்பப் பெறுவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து திமுகவின் சரவணன் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.