திருடிய பெண்ணுக்கு லாரி நிறைய மளிகை சாமான் வாங்கி கொடுத்த போலீஸ்

படத்தில் இருக்கும் இந்த பெண் அமெரிக்காவின் நியூஜெர்ஸி பகுதியை சேர்ந்தவர். இவர் தனது குழந்தையின் பசியை போக்க ஒரு கடையில் ஐந்து முட்டைகள் திருடி கடைக்காரரால் மாட்டிக்கொண்டார்.

இதுகுறித்து விசாரணை செய்த போலீஸ், அந்த பெண்ணை கைது செய்வதற்கு பதில், அவருடைய பரிதாபமான நிலையை அறிந்தவுடன் அவரே அந்த பெண்ணையும் அவருடைய குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

பின்னர் ஒரு லாரி நிறைய மளிகை சாமான்களை அவர் தனது சொந்த பணத்தில் வாங்கி கொடுத்தார். போலீசாரின் இந்த உதவியால் அந்த பெண் நெகிழ்ந்து போனார்

Leave a Reply