திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை: 11வது நபர் கைது

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த திருமாறன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூரில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதே நகரை சேர்ந்த பஜனை மாட தெருவை சேர்ந்த திருமாறன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விசாரணையின் மூலம் மேலும் சிலர் இந்த கொள்ள விவகாரத்தில் சிக்குவார்கள் என்றும் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

 

Leave a Reply