shadow

தாய்லாந்து குகை: மீட்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்வு

தாய்லாந்து நாட்டில் 15 பேர் கொண்ட சிறுவர்கள் குழு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குகையில் சிக்கி கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

தாய்லாந்து கப்பல் படையினர்களும், நீச்சல் வீர்ர்களும் இந்த மீட்பு பணியில் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்று காலை 4 சிறுவர்கள் மீட்கப்பட்ட செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது

இதுகுறித்து தாய்லாந்து செய்தி நிறுவனம் ஒன்று கூறியபோது, குகையில் இருந்து மேலும் 3 சிறுவர்களை மீட்புப்படையினர் மீட்டதாகவும், தற்போது வரை மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது. இன்னும் 8 சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply