shadow

தாமரை குளத்திலும் மலரும், களத்திலும் மலரும்: தமிழிசை

பாஜகவை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வரை வளர்த்தே தீருவேன் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தொடர்ந்து சூளூரைத்து வருகிறார். ஆனால் அவரை வெறுப்பேற்றவதற்கென்றே தமிழக அரசியல் தலைவர்கள் தாமரை தமிழகத்தில் மலராது என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் குளத்திலும், களத்திலும் தாமரை மலர்ந்தே தீரும், அதில் எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம் வேண்டாம் என்று தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.

மேலும் மேகதாது அணை கட்ட ஒரு சதவீதம் கூட பாஜக அனுமதிக்காது என்றும் ஆணித்தரமாக உறுதியளித்துள்ளார். மத்திய அரசு ஆய்வு செய்வதற்கு மட்டுமே கர்நாடக அரசை அனுமதித்துள்ளதாகவும், அணை கட்ட அனுமதி தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply