shadow

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்துவிட்டு தான் என் உயிர் போகும் – தமிழிசை

ஆவியைப் பார்த்து பயப்படுவது போல, காவியைப் பார்த்து பயப்படுகிறார்கள் என கரூரில் நடந்த பாஜக பொதுக்குழுவில் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.
கரூரில் பாஜக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் , ஹெச் ராஜா, இல கணேஷன், தமிழிசை ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய தமிழிசை, “பாஜக என்றால் பொறுமையாக இருப்பார்கள் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் நாங்களும் திருப்பி அடிக்கின்ற கூட்டம் தான். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் காலம் வந்துவிட்டது. பாஜக ஆட்சி அமைந்த பின்பு தான் என் உயிர்போகும்.

என்னை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் நிறைய விமர்சனங்கள் வருகின்றது. இது கண்டனத்திற்குரியது.” என தமிழிசை தெரிவித்துள்ளார்

Leave a Reply