நேற்று முன் தினம் அக்டோபர் 31 வரை தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது

ஆனால் நேற்று மத்திய அரசு வெளியிட்ட அடுத்தகட்ட ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளில் 50 சதவீத இருக்கைகளுடன் அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்தது

இதுகுறித்து கருத்து கூறிய தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி இந்த அறிவிப்பு தமிழகத்தில் செயல்படுத்தப்படும்’ என்று கூறினார்.

Leave a Reply