முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்படுவது வேதனை அளிக்கிறது என்றும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறியுள்ளார்.
மேலும் தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ ஏற்படும் பாதிப்புகளை களைய உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் மும்மொழிக் கொள்கையை மாண்புமிகு அம்மாவின் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.