தனுஷ் எழுதி பாடிய பாடல் இன்று வெளியீடு
நடிகர் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய ‘மாரி 2’ திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் இன்று நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.
‘ரெளடி பேபி’ என்று தொடங்குக்ம் இந்த பாடலை தனுஷே எழுதி பாடியுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தனுஷ் ஏற்கனவே ‘ஒய் திஸ் கொலைவெறி’ உள்பட பல பாடல்களை எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.