தனியார் ரிசார்ட்டில் மது அருந்த வந்த 7 பெண்கள் உள்பட 160 பேர் கைது!
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியார் ரிசார்ட் ஒன்று மது அருந்துவதற்காக ஒன்று கூடிய 160 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் 7 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் என்ற பகுதியில் 100க்கும் மேற்பட்ட சிலர் ஒன்று கூடி மது அருந்தி கொண்டிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
அந்த விடுதி சுற்றி வளைக்கப்பட்டு பின்னர் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து , மது அருந்தி கொண்டிருந்த ஏராளமானோர்களை கைது செய்தனர். 7 பெண்கள் உள்பட 160 பேரைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.