தகுதி நீக்கம் குறித்து மூன்று எம்.எல்.ஏக்கள் விளக்கம்

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வனை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபால் அவர்களிடம் பரிந்துரை செய்துள்ள நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மூன்று எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டால் அதற்கு விளக்கம் தருவோம்; சபாநாயகரின் நோட்டீஸ் கிடைத்த பிறகு அதனடிப்படையில் எனது முடிவு இருக்கும் என்று எம்.எல்.ஏ. பிரபு தெரிவித்துள்ளார்

இரட்டை இலைக்கு ஆதரவாகவே இருப்போம், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை; உள்நோக்கத்துடன் எங்கள் மீது கொறடா ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார் என்று எம்எல்ஏ கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்

Leave a Reply