டெல்லி கலவரத்தை கண்டித்த நீதிபதி பஞ்சாபிற்கு மாற்றம்!

டெல்லி கலவரம் குறித்து நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் நீதிபதி முரளிதர் ராவ், கடுமையாக மத்திய அரசை விமர்சனம் செய்தார் என்று செய்திகள் வெளியானது. டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்றும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியவர்களை ஏன் கைது செய்யவில்லை என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்

மேலும் டெல்லி கலவரத்தை வேடிக்கை பார்த்த காவல்துறையையும் அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்களை விமர்சனம் செய்து உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி முரளிதர்ராவ் உத்தரவிட்டார்

இந்த நிலையில் டெல்லி கலவரம் தொடர்பாக அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதி முரளிதர் திடீரென பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் மன்றத்திற்கு இரவோடு இரவாக இடமாற்றம் செய்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டெல்லி கலவரம் குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் உத்தரவிட்டதால் தான் இந்த மாற்றம் என்று அரசியல் வட்டாரங்களில் கூறி வருவதால் பெரும் ஏற்பட்டுள்ளது

Leave a Reply