ஜெயலலிதா ஏன் இவர்களை பேச விடவில்லை என்று இப்போது தெரிகிறதா? துரைமுருகன்
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஜெயா டிவிக்கு திமுக பிரமுகர் ஒருவர் பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில் ஜெயலலிதா குறித்தும், அவருடன் தனக்கு இருந்த அரசியல் உறவு குறித்தும் மனம் திறந்தார். மேலும் மந்திரிகளை ஜெயலலிதா வைத்திருந்த விதம் குறித்து கூறியபோது, ‘ இவ்வளவு மந்திரிகள் இருந்தார்களே ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது யாராவது பேசினார்களா? அவர்கள் உளறுவார்கள் என்று அவருக்கு தெரியும். அதனால்தான் எல்லாவற்றையும் நானே பேசிக் கொள்கிறேன் என்று வைத்திருந்தார்.
ஒரு மந்திரி டெங்கு வந்தால் வீட்டு முன்பு சாணம் தெளிக்க கூறுகிறார். இன்னொரு மந்திரி பிரதமர் மன்மோகன்சிங் என்கிறார். இன்னொரு மந்திரி தண்ணீர் வெப்பமாகாமல் தடுக்க தெர்மாகோல் போட்டு மூடுகிறார். இதையெல்லாம் கேட்க ஆள் இல்லை. இப்போது தெரிகிறதா? ஜெயலலிதா ஏன் இவர்களை பேச விடவில்லை என்று அமைச்சர்களின் திறமை அவ்வளவு தான் என்று ஜெயலலிதாவுக்கு தெரியும்’ என்று கூறினார்
மேலும் சட்டசபையில் தன்னோடு ஜெயலலிதா நன்றாக பேசுவார் என்றும், தான் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு திரும்பிய போது உடல் நலமும் விசாரித்ததாகவும் தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.