ஜெயலலிதா, அப்பல்லோ, கொடநாடு-சைக்கோ திரைப்படம்: உதயநிதி ஃபார்வேர்டு செய்த மெசேஜ்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய சைக்கோ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் சற்றுமுன்னர் உதயநிதி தனது டுவிட்டரில் இந்த படம் குறித்து தனக்கு வந்த வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்றை பார்வர்டு செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

சைக்கோ படத்தில் எங்குமே சிசிடிவி கேமரா இல்லை என்று கேட்கப்படுகிறது. அந்த படம் சிறையில் ராம்குமார் வயரை கடித்த காலம், கொடநாடு கொள்ளை நடந்த காலம், ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த காலகட்டங்களில் எடுக்கப்பட்டது என்பதால் சிசிடிவி கேமரா எங்கும் இருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் மிஷ்கின் ஆர்மி சார்பாக நாங்கள் சொல்ல விரும்பும் பதில்

முதலில் அவர்களை சிசிடிவி கேமராவை காட்டச் சொல்லுங்கள் அப்புறமாக நாங்க காட்டுவோம் என்று அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply