மத்திய அமைச்சர் தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் கடந்த 70 நாட்களாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு விரைவில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கும் என்றும் அதே போல் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கிய பிறகே திரையரங்குகள் திறக்கப்படும் என தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் ஜூன் மாத இறுதியில் கொரனோ பாதிப்பு நிலையைப் பொறுத்து திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே இம் மாதம் மூன்றாவது வாரம் அல்லது நான்காவது வாரம் திரையரங்குகள் திறப்பது குறித்து பரிசீலனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரின் இந்த தகவல் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply