ஜார்கண்டில் குண்டுவெடிப்பு: 11 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சராய்கெல்லா என்ற பகுதியில் சிறிய ரக குண்டுவெடித்ததில் பாதுகாப்புப்படை வீரர்கள் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது.

குச்சாய் பகுதியில் இருந்த கோப்ரா என்னும் சிறப்பு படைப்பிரிவு முகாமில் சிறியரக குண்டு வெடித்ததாகவும் இந்த வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்த 11 வீரர்களும் ராஞ்சி கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply