shadow

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க நேரிடும்: மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

பொங்கல் பண்டிகையின்போது தமிழக்த்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை மெரீனாவில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது.

இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தும்போது உள்ளூர் நபர்களால் பிரச்சனை ஏற்படுவதும் அதன்பின்னர் மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்துவதும் வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது. இதுகுறித்த வழக்கு ஒன்றின்போது, ஜல்லிக்கட்டு நடத்திவதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையெனில் தடை விதிக்க நேரிடும் என ஐகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply