சோதனை மிகுந்த கொரோனா காலத்தில் கூட தமிழகத்தில் 55 புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.40,718 கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டு, 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று (28.11.2020) காணொலிக்காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டேன் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.