சென்னை திரையரங்கிற்கு 100 மடங்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

சென்னை கோயம்பேடு அருகே உள்ள ஒரு திரையரங்க வளாகத்திற்கு வசூல் செய்த கட்டணத்டை விட 100 மடங்கு நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை திரையரன்க்கில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தபோது டிக்கெட் கட்டணமாக 150 ரூபாய், முன்பதிவு கட்டணமாக 35 ரூபாய் 40 பைசா என்று மொத்தம் 185 ரூபாய் 40 பைசாவை வசூலித்து உள்ளது. அரசு நிர்ணயம் செய்த அதிகபட்சக் கட்டணமாக 100 ரூபாய் என்ற நிலையில் இந்த திரையரங்க நிர்வாகம் அதிக கட்டணம் வசூலித்ததை அடுத்து தேவராஜன் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவில் தேவராஜனுக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும், மனஉளைச்சலுக்காக 5 ஆயிரம் ரூபாயும் வழங்க அந்த திரையரங்க நிர்வாகத்திற்கு, நீதிபதி உத்தரவிட்டார். 15 ஆயிரம் ரூபாய் என்பது அந்த திரையரங்க நிர்வாகம் கூடுதலாக வசூலித்த டிக்கெட் தொகையான 150 ரூபாயில் 100 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply