shadow

சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. தொடர்மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவஸ்தையில் உள்ளனர்

இந்த நிலையில் நேற்றிரவு முதல் விட்டுவிட்டும் இன்று அதிகாலை முதல் சென்னையின் பல பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டம் மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், காரைக்கால், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

 

Leave a Reply