அரசு உத்தரவு
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வரும் 13 ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வரும் 15ஆம் தேதி முதல் பாட புத்தகங்கள் வழங்கும் பணிகள் இருப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் அனிதா உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் பள்ளி திறப்பது குறித்த எந்தவித அறிவிப்பும் தகவலும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த கல்வியாண்டுக்குரிய புத்தகங்களை மாணவர்கள் பெற்று டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலம் பாடங்களை படிக்க வசதியாக புத்தகங்கள் வழங்கும் பணி 15ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.