சென்னையின் முக்கிய பகுதியான ஆயிரம் விளக்கு பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் பேட்டரியில் இருந்து திடீரென மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது

இந்த மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தீ விபத்தில் ஒரு ஆட்டோ, ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமான தாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்

Leave a Reply