அக்டோபர் 30-ஆம் தேதி சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது

ஆனால் தடையில்லா சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று சூர்யா தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் அமேசானிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கேன்சல் செய்துவிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அனேகமாக அடுத்த வாரம் அல்லது நவம்பர் 1 முதல் திரை அரங்குகள் திறந்த பின் திரையரங்குகளில் நேரடியாக ரிலீஸ் செய்ய சூர்யா முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply