நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் தலா 157 ரன்கள் எடுத்ததை அடுத்து சூப்பர் ஓவர் முடிவு செய்யப்பட்டது

இந்த சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 2 ரன்களே எடுத்தது அதன்பின் சூப்பர் ஓவரை விளையாடிய டெல்லி அணி 3 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

இந்தப் போட்டியில் ஸ்டோனிஸ் மிக அபாரமாக விளையாடிய 21 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி பந்துவீச்சிலும் அவர் அசத்தினார்

கடைசி ஓவரில் அவர் எடுத்த 2 விக்கெட்டுக்களால் சூப்பர் ஓவருக்கு போட்டியை கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply