shadow

சூடு சுரணை பற்றி ஸ்டாலின் பேசலாமா? பிரேமலதா விஜயகாந்த்

நேற்று அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் பெற்று பாமக கூட்டணியில் இணைந்தது. அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த பாமக, மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்தது குறித்து பல்வேறு தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் சூடு, சுரணை இல்லாதவர் என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், ‘கூட்டணிக்காக நேற்றுவரை ராமதாஸ் காலை பிடித்து தொங்கி கொண்டிருந்த ஸ்டாலின் சூடு சுரணை பற்றி பேசலாமா என்று கூறியுள்ளார்.

தேமுதிகவும், பாமகவும் எதிரும் புதிருமான கட்சி என்று கூறப்படும் நிலையில் தற்போது திடீரென பாமகவுக்கு ஆதரவாக தேமுதிக பேசியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

Leave a Reply